search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 பெண்கள் உள்பட 4 பேர் மீது மோசடி வழக்கு
    X

    2 பெண்கள் உள்பட 4 பேர் மீது மோசடி வழக்கு

    • மதுரையில் வீடு வாங்குவது தொடர்பாக மோசடி நடந்துள்ளது.
    • 2 பெண்கள் உள்பட 4 பேர்மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை தனக்கன்குளம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், "நான் சண்முகம் தெருவில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்க விரும்பினேன். இதற்காக குணசேகரன், ராஜபாண்டி, குணசேகரன் மனைவி பாண்டி மீனா, ராஜபாண்டி மனைவி பிரியா ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன்.

    அப்போது செக் பவுன்ஸ் மூலம் எனக்கு வீட்டை விற்காமல் மோசடி செய்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னசாமியிடம் மேற்கண்ட 4 பேரும் ஒப்பந்தம் வாயிலாக பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் திருநகர் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×