என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிறந்த பெண் குழந்தை ஒரே நாளில் சாவு
- பிறந்த பெண் குழந்தை ஒரே நாளில் இறந்தது.
- பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராம் (வயது34). இவரது மனைவி ராதிகா (32). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராதிகா மீண்டும் கர்ப்பமடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவ மனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று (8-ந் தேதி) அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. அதற்கு பின்பு டாக்டர்கள் பரிசோதனைக்கு பின்பு தாயும், சேயும் நலமுடன் இருந்தனர்.
இந்த நிலையில் அந்த குழந்தை இன்று காலை இறந்தது. பிறந்து நலமுடன் இருந்த பெண் குழந்தை ஒரே நாளில் இறந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்