என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தந்தை தற்கொலை
- விஷம் குடித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் முத்தலிப்பு (வயது60). கடந்த வருடம் இவரது மகன் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பலியானார். அன்றிலிருந்து மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து தற்காலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தலிபு பரிதா பமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி பானு செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரிமேடு மோதிலால் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜா (36). இவர் மனை வியுடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டு தனியாக வசித்து வந்தார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜாவின் சகோதரி ஈஸ்வரி, கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






