search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா
    X

    திருமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியபோது எடுத்தபடம். அருகில் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் மற்றும் பலர் உள்ளனர்.

    தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா

    • உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடக்கிறது.
    • இளைஞரணி மாநாட்டில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொள்ள–வேண்டும்.

    திருமங்கலம்

    மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திரு–மங்கலத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    சேலத்தில் தி.மு.க.வின் இரண்டாவது இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மதுரை தெற்குமாவட்டத்திலிருந்து அதிகளவில் கட்சியினர் பங்கேற்க வேண்டும். தெற்கு மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள–வேண்டும்.

    இதில் கலந்து கொள்ளும் இளைஞரணி–யினர் 20 வயது முதல் 30 வயதிற் குட்பட்டு இருக்கவேண்டும். பூத்திற்கு 25 பேர் வீதம் தேர்வு–செய்ய வேண்டும். அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

    விரைவில் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள் ளும் நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து மாவட்ட செயலாளரிடம் வழங்க–வேண்டும். வடக்கு, தெற்கு, மாநகா் என மூன்று மாவட் டங்களிலிருந்து அதிகளவில் இளைஞரணி கலந்து கொண்டு முன்னணி மாவட் டமாக ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம் மாநாட் டில் இடம்பிடிக்க வேண்டும்.

    வரும் செப்டம்பர் 20-ந்தேதி திருமங்கலத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாநில இளைஞரணி செயலாளரும், விளை–யாட்டுத் துறை அமைச்ச–ருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி–களை வழங்கி பேசுகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஏராள–மானோர் கலந்து கொள்ள–வேண்டும் என்றார்.

    தெற்கு மாவட்டச் செய–லாளர் சேடபட்டி மணி–மாறன் பேசுகையில், மது–ரையில் இதுவரையில் நடைபெற்ற அனைத்து கூட்டங்களையும் சிறப்பான மாநாடாகவே நாம் நடத்தி–யுள்ளோம். தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டா–லின் கலந்து கொள்ளும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியையும் சிறப்பான மாநாடு போல நடத்த–வேண்டும். கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு திரு–மங்கலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பொற்கிழி வழங்கு–கிறார்.

    சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொள்ள–வேண்டும். நாம் வலிமை–யான தலைமையில் கீழ் இயங்கி வருகிறோம். இன் னும் 30 ஆண்டுகள் ஆனா–லும் தி.மு.க. ஆட்சி தமிழ–கத்தில் தொடரும். வரும் நாடாளு–மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கதான வெற்றி பெற உழைக்கவேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் மாநில விவசாய அணி இணை செயலாளர் முத்துராமலிங் கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் லதா அதிய மான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்த லைவர் ஆதவன், மண்டல தலைவர் சுவிதாவிமல், தக வல் தொழில்நுட்ப மதுரை மண்டல பொறுப்பா ளர் பாசபிரபு,

    ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, ராமமூர்த்தி, ஆலம்பட்டி சண்முகம், தங்கபாண்டி, மதன்குமார், நகரப் பொருளாளர் சின்னச்சாமி மீனவர் அணி ஆலங்குளம் செல்வம் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×