search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    • கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் சினிமா சண்டை பயிற்சியாளர் பேசியதாக கூறப்படுகிறது.

    மதுரை

    மாற்று மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியதாக சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவித்து இருந்தது.

    அதன்படி மதுரை ஜான்சிராணி பூங்கா, நேதாஜி சிலை முன்பு இன்று இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் கரடிபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போலீசாரிடம் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல மதுரை முனிசாலை சந்திப்பு பகுதியில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையிலும், ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர் சந்திப்பு பகுதியில் மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமையிலும், புதூர் பஸ் நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிக்குமார் தலைமையிலும், அண்ணா நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் தலைமையிலும், திருப்பரங்குன்றத்தில் பகுதி செயலாளர் ராஜசேகர் தலைமையிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    Next Story
    ×