search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உதயநிதிக்கு பட்டாபிஷேகம்; மக்களுக்கு வரிச்சுமையா?-செல்லூர் ராஜூ கேள்வி
    X

    மதுரை முனிச்சாலை சந்திப்பில் நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், கணேஷ்பிரபு, பரவை ராஜா, சண்முகவள்ளி, பைக்கரா கருப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    உதயநிதிக்கு பட்டாபிஷேகம்; மக்களுக்கு வரிச்சுமையா?-செல்லூர் ராஜூ கேள்வி

    • மின்கட்டணம், சொத்து வரி, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மின்கட்டணம், சொத்து வரி, ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை காமராஜர் சாலை முனிச்சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி அவர் பேசியதாவது:-

    தற்போது தமிழகம் முழுவதும் வீட்டு வரி அதிகளவில் உயர்த்தப்ப ட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்றுவிடலாமா? என தோன்ற வைக்கிறது.

    தமிழகத்திலேயே மக்கள் தி.மு.க. ஆட்சியில் தினமும் அல்லாடி வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியிலும் தி.மு.க. ஆட்சியை அமைய அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் பேசி உள்ளார். தமிழக மக்கள் கஷ்டப்படுவது போதாதா? புதுச்சேரியும் கஷ்டப்பட வேண்டுமா? என்பதை மு.க.ஸ்டாலின் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறை வேற்றப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் ஆதார் எண்ணை, மின் அட்டையோடு இணைப்போம் என்று சொன்னீர்களா? மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ளனர்.

    விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பின் போது முதல்வர் சரி செய்வேன் என ஞான உதயம் வந்து அறிவிக்க வேண்டும் என மீனாட்சியம்மனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

    உதயநிதிக்கு பட்டாபிஷேகம், மக்களுக்கு வரி சுமையா? கருணாநிதி குடும்பத்தின் பிரைவேட் கம்பெனி ஆகிவிட்டது தி.மு.க. கட்சி. நாளைய தினம் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய உள்ளார்கள்.

    முன்பு மன்னராட்சி காலத்தில் இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது குறுநில மன்னர்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள். அது போல உதயநிதி அமைச்சராக பதவியேற்பதை முன்னிட்டு சொத்துவரி, மின்சார கட்டணம், பால் விலை உள்ளிட்ட உயர்வுகளை ரத்து செய்து மக்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

    முடிசூட்டு விழாவின் போதாவது மக்களுக்கு இனிப்பான செய்தியை சொல்ல வேண்டும் தி.மு.க. அரசு.

    இவ்வாறு செல்லூர் ராஜூ பேசினார்.

    Next Story
    ×