search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் மாநாடு
    X

    மாற்றுத்திறனாளிகள் மாநாடு

    • எழுமலையில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது.
    • விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உசிலம்பட்டி

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மதுரை புறநகர் மாவட்ட 4 வது மாநாடு மதுரை மாவட்டம் எழுமலையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்கள் ஜீவா, முத்துக்காந்தாரி, மாவட்டச் செயலாளர் முருகன், துணைத்தலைவர் தவமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேடபட்டி ஒன்றிய செயலாளர் ராஜா சங்கர் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் நாகராஜ், சின்னச்சாமி மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டையை ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டையாக மாற்றித்தர வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு கூலியை முழுமையாக வழங்க வேண்டும். விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வாய்ப்புக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×