என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி தற்கொலை
- திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை அருகேயுள்ள ஐராவதநல்லூர் விநாயகர் காலனியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் லாவண்யா(வயது22). இவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக லாவண்யாவுக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவரது பெற்றோர் வரன் பார்ப்பதை தீவிரப்படுத் தினர். ஆனால் திருமணத்தில் நாட்டமில்லாத லாவண்யா தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் என பெற்றோ ரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.
இதனால் மன வேதனை அடைந்த லாவண்யா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






