search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதை வசதி இல்லாமல் பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி கட்டிடம்
    X

    பாதை வசதி இல்லாமல் பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி கட்டிடம்

    • பாதை வசதி இல்லாமல் அங்கன்வாடி கட்டிடம் பூட்டிக்கிடக்கிறது.
    • ஆக்கிமிப்புகளை அகற்றி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துகுழி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அங்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். வயல்வெளியோர பகுதியில் இந்த கட்டிடம் உள்ளதால் மழை காலங்களில் நீர் ஊற்றெடுத்து மையத்தின் முன்பு தேங்கி நின்று சேறு சகதியாக மாறி பாதை வசதியில்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் வழியில் முள் செடிகள் முளைத்து அடர்ந்த வனம் போல் காட்சியளிக்கிறது.

    அங்கன்வாடி மையக்கட்டத்தில் சுவர்கள் மற்றும் தரைதளங்கள் அங்காங்கே புதைகுழி போல் பெயர்ந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையத்தை மந்தையில் உள்ள சமுதாய கூடத்திற்கு மாற்றம் செய்து தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றி பேவர்பிளாக் சாலை அமைத்து கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×