search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து போராடும்
    X

    மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மின் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து போராடும்

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்ட ணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அ.தி. மு.க. சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதில் செல்லூர் ராஜூ அப்போது அவர் பேசியதாவது-

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. விபத்தில் ஜெயித்துவிட்டது. 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மாறிவிட்டது.தி.மு.க ஆட்சியில் கட்சியும் கண்ட்ரோல் இல்லை, ஆட்சியும் கண்ட்ரோல் இல்லை. இந்துக்கள் குறித்து ஆ.ராஜா எம்பி தரக்குறைவாக பேசி உள்ளார். இவ்வாறு அவர் பேசியதற்கு கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும்.ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது முதல மைச்சரின் இயலாமை யை காட்டுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டன உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் மு க ஸ்டாலின். 8 வழி சாலை வேண்டாம் என்று கூறி மக்களை திசை திருப்பியவர் மு. க. ஸ்டாலின். ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்ததும் இரட்டை வேடம் போடுகிறார். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இப்போது மின்கட்டண உயர்வை ஏற்றி மேலும் சுமையை அதிகரித்து உள்ளனர். இதனால் மக்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளனர். மக்களுக்காக போராடும் இயக்கம் அ.தி.மு.க. தான். மின் கட்டன உயர்வை ரத்து செய்யும் வரை

    அ.தி. மு.க. தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×