search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. விரைவில் ஆளும் கட்சியாக வரும்-முன்னாள் அமைச்சர் பேச்சு
    X

    அ.தி.மு.க. விரைவில் ஆளும் கட்சியாக வரும்-முன்னாள் அமைச்சர் பேச்சு

    • மதுரை சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது;-

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகள் மின் கட்டணம் உயர்வு இல்லை, சொத்து உயர்வு இல்லை. அப்போது மத்திய அரசு நிர்பந்தம் செய்து கூட மக்கள் மீது விலைவாசி ஏற்றத்தை சுமத்தவில்லை.

    தமிழக மக்களின் வாழ்க்கையை உயர்த்திட மக்கள் வாக்களித்தால், இன்றைக்கு மக்கள் மீது விலைவாசி உயர்வை இந்த அரசு சுமத்தி உள்ளது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தபோது அங்கு அண்ணாயிசம் இல்லாத தால், அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து எம்.ஜி.ஆர். பெரியப்பா என்று கூறு கிறார் .

    தி.மு.க.வில் கருணா நிதியை முதலமைச்சராக்க எம்.ஜி.ஆர். உழைத்தார். ஆனால் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள். உழைத்தவருக்கு அங்கு இடம் இல்லை. மக்களும் அவரை தூக்கி வைத்துக் கொண்டதால் இதன் மூலம் அ.தி.மு.க.வை தொடங்கினார். 51 ஆண்டுகாலம் அ.தி.மு.க. மக்களுக்காக பொது சேவையில் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்துக் கொண்டது.

    அண்ணாயிசம், அம்மாயிசம், எம்.ஜி.ஆர்.யிசம் ஆகியவை அ.தி.மு.க.விற்கு தான் சொந்தம். மு.க.ஸ்டாலின் பேச்சை எந்த தொண்டனும் நம்ப மாட்டார்கள். எம்.ஜி.ஆர். கருணாநிதிக்காக உழைத்தார். அவரை கசக்கி எறிந்ததை தாய்மார்கள் இன்னும் மறக்க மாட்டார்கள். இன்றைக்கு எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து தி.மு.க. செல்வாக்கு காணாமல் போய்விட்டது என்பதற்கு இன்றைக்கு மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மழையே பெய்யதாலும் கூட எடப்பாடி கொடுத்த ஒரு உத்தரவுக்காக தொண்டர்கள் குவிந்துள்ள னர். இந்த கூட்டமே விரைவில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக வர அத்தாட்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×