என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
- வாடிப்பட்டி அருகே அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார்.
சோழவந்தான்
வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் செல்லம்பட்டி ராஜா, மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா,பொதுக்குழு நாகராஜ், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, இணை செயலாளர் வனிதா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், கணேசன், சோழவந்தான் நகர இளைஞரணி மணி, எம்.ஜி.ஆர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.