search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. கவுன்சிலர் இல்ல திருமண விழா
    X

    அ.தி.மு.க. கவுன்சிலர் இல்ல திருமண விழா

    • அ.தி.மு.க. கவுன்சிலர் இல்ல திருமண விழா நடைபெற உள்ளது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைக்கிறார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மேற்கு 1-ம் பகுதி 83-வது வார்டு செயலாளரும், 83-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு உறுப்பினருமான எஸ்.எம்.டி. ரவி-வேணி தம்பதி யின் மகன் மனோஜ் பாண்டியனுக்கும், தல்லாகுளம் ம.தி.மு.க. பகுதி செயலாளர் வேல். புகழ்முருகன்- பாண்டி யம்மாள் தம்பதியின் மகள் கார்த்தி காவுக்கும் பெரி யோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    இவர்களது திருமணம் நாளை (10-ந் தேதி) மதுரை காமராஜர் சாலை நிர்மலா மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரது மனைவி ஜெயந்தி ராஜூ ஆகியோர் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள். திருமண விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், பல் வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதி பர்கள், உற்றார், உறவி னர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண ஏற்பாடுகளை எஸ். எம். டி. ரவி- வேணி, திவ்யதர்ஷினி -பாண்டி குமார், முருகன், தெற்கு 2-ம் பகுதி பேரவை செயலாளர் முத்துப் பாண்டி-முத்துமீனா மற்றும் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×