search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டும், குழியுமான சாலையில் தொடரும் விபத்து
    X

    மழைநீர் தேங்கியுள்ள குண்டும், குழியுமான சாலை.

    குண்டும், குழியுமான சாலையில் தொடரும் விபத்து

    • திருமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலையில் தொடரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கி நின்று சாலை சேதமடைந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து ராஜபாளையம் சாலை சந்திப்பு வரையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை போடப்பட்டது.

    இந்த நிலையில் திருமங்கலம் - மதுரை நெடுஞ்சாலையில் கூட்டுறவு துறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் எதிரில் போடப்பட்ட சாலை மழை நீர் வடிகால் கால்வாயைவிட 2 அடி கீழிறக்கி சாலை போடப்பட்டுள்ளது.இதனால் சிறிது அளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் உருவாகியது.

    பள்ளமான இடம் என்பதால் மழைநீர் தேங்கியதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அடிக்கடி தண்ணீர் தேங்குவதால் சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலை துறை, நகராட்சி அதிகாரிகளிடமும் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கி நின்று சாலை சேதமடைந்தது.

    இதில் ஆங்காங்கே சாலையில் குண்டும் குழியுமாக பள்ளங்கள் ஏற்பட்டதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகியது.

    இரவு நேரங்களில் பள்ளங்கள் தெரியாததால் 3 பெண்கள், நகராட்சி ஊழியர் உட்பட 5 பேர் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த போது தவறி விழுந்து காயம் அடைந்தனர்.

    உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×