search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
    X

    2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

    • பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்.
    • மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லுர் அருகே கோட்டைமேடு மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (வயது35). இவர் தனது மகன் மேசாக் (11) மகள் மேகா (9) ஆகியோரு டன் நேற்று இரவு சுமார் 10 மணிக்கு அலங்காநல்லுர் போலீஸ் நிலையத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்தார்.

    அப்போது கண்மணி மற்றும் குழந்தைகள் திடீ ரென மயங்கி விழுந்து உள்ளனர். பின்னர் கண்மணியிடம் போலீசார் விசாரித்தபோது, தான் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமார் 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரி வித்தார். மேலும் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொக்குளம் பகுதியைச் சேர்ந்த சரண் ராஜ் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு சுமார் 2 வருடங்களாக அவருடன் வாழ்ந்து வந்த தாகவும் கூறினார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு பெண்ணுடன் சரண் ராஜூக்கு திருமணம் ஆகி விட்டது தெரியவந்ததால் தன்னை சரண்ராஜ் ஏமாற்றிய மன வேதனையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து தானும், தனது 2 குழந்தைகளும் எலி பேஸ்டை சாப்பிட்டு விட்ட தாகவும் கூறி உள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த போலீ சார் உடனடியாக அவர்கள் 3 பேரையும் அலங்காநல்லுர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக் காக அனுப்பி வைக்கப் பட்டனர். அங்கு அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேஸ்புக் காதலால் இளம்பெண் தனது இரு குழந்தையுடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×