search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • மதுரை அருகே இளம்பெண் திடீரென மாயமானார்.
    • மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகலை பரும்பு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகள்கள் ராமலட்சுமி(வயது17), விஜயலட்சுமி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். திருவிழாவை முன்னிட்டு ஜோதி தனது மகள்களை பஸ்சில் ஊருக்கு அழைத்துச்சென்றார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இறங்கிய அவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது ராமலட்சுமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×