என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பூச்செடி என்று நினைத்து கஞ்சா செடி வளர்த்த வாலிபர்
- பூச்செடி என்று நினைத்து கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- இளைஞர்களை குறி வைத்து சர்வ சாதார ணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர்.
மதுரை
மதுரை மேலமடை அருகே எழில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிவகுமார் என்பவர் வீட்டில் பூச்செடி களுக்கு நடுவே கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிவகுமாரின் மகன் கார்த்திக் சில வாரங்களுக்கு முன்பு தேனியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பூச்செடி விதைகள் எனக்கூறி சிலவற்றை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.
அதனை பூ விதை என தவறுதலாக நினைத்து தொட்டியில் வைத்து கஞ்சா செடியை கார்த்திக் வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோதிகள் பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து சர்வ சாதார ணமாக கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்