search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
    X

    தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை

    • மதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • விருதுநகர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குண்டாறு பாலம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை வைத்து ப‌டுத்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது ஏறிச் சென்றது. இதில் உடல் சிதறி அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×