search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற போலீஸ்காரர் திடீர் சாவு
    X

    தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற போலீஸ்காரர் திடீர் சாவு

    • தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற போலீஸ்காரர் திடீரென இறந்தார்.
    • பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவனியாபுரம்

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 36). இவரது மனைவி கண்மணி (30) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜபாண்டி மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றினார். சில நாட்களாக இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து ராஜபாண்டி வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை காம்பவுண்டு பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று சிகிச்சை அளிக்கும் போது ராஜ பாண்டிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் ராஜபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி கண்மணி அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதில், கணவருக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×