என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த குழந்தை சாவு
- தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த குழந்தை இறந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசகாளன்பட்டியை சேர்ந்தவா் கண்ணன் (வயது24). இவருக்கு 1½ வயதில் ருத்ரபாண்டி என்ற ஆண் குழந்தை உள்ளது. ராயபாளையம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழா விற்காக கண்ணன் குடும்பத்துடன் உறவினர் லட்சுமி வீட்டிற்கு வந்தார்.
அந்த வீட்டில் பெயிண்ட் பணிகள் நடந்து கொண்டி ருந்தன. இதற்காக தின்னர் மற்றும் ெபயிண்டுகளை வைத்திருந்தனர். விளையாடிக் கொண்டி ருந்த ருத்ரபாண்டிக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தின்னரை பார்த்து குடிநீர் பாட்டில் என குழந்தை நினைத்துள் ளான். பின்னர் அந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினான்.
இதை பார்த்து அதிர்ச்சிய டைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனா லும் சிகிச்சை பலனின்றி ருத்ர பாண்டி பரிதாபமாக இறந்தான்.
தின்னர் குடித்து குழந்தை பலியானது தொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்