search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரோட்டோரம் கிடந்த  2 மாத பெண் குழந்தை
    X

    மீட்கப்பட்ட பெண் குழந்தை.

    ரோட்டோரம் கிடந்த 2 மாத பெண் குழந்தை

    • ரோட்டோரம் கிடந்த 2 மாத பெண் குழந்தையை வீசிசென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பெண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி உணவு விடு திக்கு எதிரில் சாலை யோரம் மெத்தையுடன் கூடிய சிறிய படுக்கையில் 2 மாத பெண் குழந்தை நேற்று இரவு அநாதையாக கிடந்தது.

    இதனை கண்ட பொது மக்கள் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த குழந்தை வீசிச்சென்ற பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலையோரம் பெண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×