என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரோட்டோரம் கிடந்த 2 மாத பெண் குழந்தை
Byமாலை மலர்24 March 2023 7:51 AM GMT
- ரோட்டோரம் கிடந்த 2 மாத பெண் குழந்தையை வீசிசென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி உணவு விடு திக்கு எதிரில் சாலை யோரம் மெத்தையுடன் கூடிய சிறிய படுக்கையில் 2 மாத பெண் குழந்தை நேற்று இரவு அநாதையாக கிடந்தது.
இதனை கண்ட பொது மக்கள் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த குழந்தை வீசிச்சென்ற பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் பெண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X