search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    • கீரைத்துறையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ.6,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை கீரைத்துரையில் ராஜம்மான் நகர் கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கீரைத்துைற போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்று கண்காணித்தார்.

    அப்போது அங்கு புது ராம்நாடு ரோடு மாரி (வயது40), மேல அனுப்பானடி இளையராஜா(38), ராஜா(41), அனுப்பானடி சேகர்(41), முருகவேல்(55), ஆறுமுகம்(41) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×