என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
    X

    புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

    • புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 6 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை

    கீரைத்துறை போலீசார் பீடா கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது 25 குட்கா பாக்கெட்டுகளுடன் டவுன்ஹால் ரோடு, கிளாஸ்கார தெரு திருமலை நம்பி (வயது 47) என்பவர் பிடிபட்டார்.

    செல்லூர் போலீசார் 50 அடி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது 11 புகையிலை பாக்கெட்டுகளுடன் ஜீவா ரோட்டை சேர்ந்த அங்கப்பன் என்ற பாண்டி (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அதே பகுதியில் 3 புகையிலை பாக்கெட்டுகளுடன் தாகூர் நகரை சேர்ந்த பூமாரி (50) என்பவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

    கூடல்புதூர் போலீசார் மகாத்மா காந்தி நகர் பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு 7 குட்கா பாக்கெட்டுகளுடன் பதுங்கி இருந்த முல்லை நகர், கண்ணப்பர் தெரு கோவிந்தராஜன் (67) என்பவரை கைது செய்தனர். ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த ஹரிராஜன் (26) வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 16 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×