என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ஆயுதங்களுடன் கைதான 5 பேர்.
கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைது

- மதுரையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனிப்படை போலீசார் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
மதுரை
மதுரையில் கொலை- கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள மரக்கடை அருகே, 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 2 அரிவாள், உருட்டுக்கட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் செல்லூர், கள்ளுக்கடை சந்து சேதுராமன் என்ற ஏட்டையா (வயது 27), பாக்கியநாதபுரம் நாராயணகுரு தெரு, பால்ராஜ் (32), செல்லூர் நந்தவனம், மாரியப்பன் மகன் சூரியபிரகாஷ் (19), அய்யனார் கோவில் தெரு, சக்தி பாண்டியன் மகன் ராஜவேல் (21), செல்லூர் வள்ளுவர் தெரு, பாண்டியராஜன் மகன் தங்கபாண்டி (19) என்பதும், இவர்கள் கொள்ளை அடிப்பதற்காக கண்மாய்க்கரை பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
