என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை சம்பவம் நடந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வரும் ரவியின் வீட்டையும், போலீசார் விசாரணை நடத்தி வருவதையும் படத்தில் காணலாம்.
செக்யூரிட்டி நிறுவன அதிபர் வீட்டில் 45 பவுன் கொள்ளை
- செக்யூரிட்டி நிறுவன அதிபர் வீட்டில் 45 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது.
- கண்காணிப்பு காமிராவில் பதிவான காட் சிகளை கொண்டும் கொள் ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசி லம்பட்டி பேரையூர் ரோட் டின் கிழக்கே உள்ள அண் ணா நகர் முதல் தெரு வில் வசித்து வருபவர் செல்வ ராஜ் (வயது 50). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் வெளியூ ரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு குடும் பத்தினருடன் நேற்று புறப் பட்டு சென்றார். இதற்கி டையே நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பூட்டி யிருந்த வீட்டின் பூட்டை உடைத்து நுழைய முயன்ற னர்.
அப்போது வீட்டின் வெளியே காவலுக்கு இருந்த நாய் ெதாடர்ந்து குரைத்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த மர்ம நபர்கள் நாயால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பதை உணர்ந்து அந்த நாய் சத்தம் போடாமல் இருக்க சரமாரியாக தாக்கி காயப்படுத்தினர்.
பின்னர் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் தனி அறையில் வைக்கப்பட்டி ருந்த பீரோக்களை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள் ளையர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
இதையடுத்து அவர்கள் பேரையூர் ரோட்டில் மேற்கே பசும்பொன் நகரில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தும் ரவி (48) என்பவரது வீட்டிற்குள் புகுந்தனர். அந்த சமயம் ரவி போத்தம்பட்டி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந் தார்.
இதனை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த அந்த கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். பின் னர் பீரோவில் இருந்து 45 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இன்று காலை வீடு திரும்பிய ரவி, வீட் டிற்குள் மர்ம நபர்கள் புகுந்திருப்பதையும், நகை கள் கொள்ளை போயிருந்த தையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் உசிலம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தடய வியல் நிபுணர்கள் மூலம் தடயங்களை பதிவு செய்தும், அந்த பகுதியில் பொருத்தப் பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட் சிகளை கொண்டும் கொள் ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.






