search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் சாவு
    X

    வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் சாவு

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    கரும்பாலை எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த ரங்கநாதன் மகன் மகேஸ்வரன் (30).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.

    இந்த நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ மனைவிக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.மனமுடைந்த மகேசுவரன் வீட்டில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாயார் சிவகாமி கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நடத்தினர்.

    மேல பொன்னகரம் 5-வது தெருவை சேர்ந்தவர் விக்டர் பால்ராஜ்(70). இவர் தத்தனேரி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு சைக்கிளில் சென்றபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மகன் பிராங்கிளின் டேவிட் ஜெபராஜ் கொடுத்த புகாரின்பேரில் செல்லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து மு விசாரணை நடத்தினர்.

    தத்தனேரி களத்துப்பொட்டல் பர்மா காலனியை சேர்ந்தவர் செல்லதுரை(51). டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கொன்னவாயன் சாலையில் சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வைகை வடகரை ஆர்.ஆர்.மண்டபம் மேளக்கார தெருவை சேர்ந்த முத்துமணி மகன் யோகேசுவரன் (14). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சிறுவன் யோகேசுவரன் பரிதாபமாக உயிரிழந்தான். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×