search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
    X

    இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

    • மதுரை அருகே இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பாக திருப்பரங்குன்றம், அவனியாபுரம், கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருமலையூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம். இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). இவருக்கு தீராத வயிற்று வலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் பலன் இல்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகாலட்சுமி, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அவனியாபுரம், பிரியங்கா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. எனவே தனிமையில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. எனவே ரவிக்குமார் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி, பிரயோக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை கே.புதூர், ராமவர்மா நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 63). இவருக்கு நிரந்தர வேலை இல்லை. எனவே குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆசீர்வாதம் சம்பவத்தன்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×