search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

    • முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வைத்தியநாதபுரம் கொன்னவாயன் சாலை இந்திரா நகர் மெயின் ரோட் டை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் இன்பக் கொடி(வயது 37). இவருக்கு குடி பழக்கம் இருந்தது.

    இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட் டது. இதனால் மன உடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி செல்வராணி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இன்பக் கொடியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்மேனி ரோடு நேதாஜி தெருவை சேர்ந்த வர் சிவராமகிருஷ்ணன் (70). இவர் காளிமுத்து நகர் பொன்மேனி மெயின் ரோட்டில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவர் கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் கணபதி ராஜா எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் சிவராம கிருஷ்ணனின் சாவுக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மேளவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி ஆயிஷா மரியம் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலை கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×