என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரை- ராமேசுவரம் சிறப்பு ரெயில் மூலம் ரூ.2 லட்சம் வசூல்
- மதுரை- ராமேசுவரம் சிறப்பு ரெயில் மூலம் ரூ.2 லட்சம் வசூல் கிைடத்தது.
- ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
மதுரை
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு நேற்று முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இது மதுரையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் சென்றது.
கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாக சென்ற ரெயிலில் 1140 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 72 ஆயிரத்து 700 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.
மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்ட ரெயில், மாலை 5.15 மணிக்கு மதுரை வந்தது. இதில் 1853 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 575 ரூபாய் கட்டணம் வசூல் ஆனது.
மதுரை- ராமேசுவரம் ஆடி அமாவாசை சிறப்பு ரெயிலில் 2993 பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் ரெயில்வே துறைக்கு ஒரே நாளில் ரூ.2 லட்சம் வருமானம் கிடைத்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்