search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் 104 குளங்கள் புதிதாக அமைக்கப்படும்-கலெக்டர் தகவல்
    X

    மதுரையில் 104 குளங்கள் புதிதாக அமைக்கப்படும்-கலெக்டர் தகவல்

    • மதுரையில் 104 குளங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ஆய்வின்போது கூடுதல் கலெக்டர், செயற்பொறியாளர் உடனிருந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், திருமங்கலம் சாத்தங்குடி ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் 'அம்ரித் சரோவர்' திட்டத்தின் கீழ் புதிய ஊரணி (குளம்) அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், செயற்பொறியாளர் மதுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் கலெக்டர் அனீஷ்சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் கிராமப்புறங்களில் நீர்நிலைகளை மேம்படுத்துவது தொடர்பாக அம்ரித் சரோவர் என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்குள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியத்திற்கு 8 குளங்கள் வீதம் மொத்தம் 104 குளங்கள் புதிதாக உருவாக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    கிராம ஊராட்சிகளில் மேற்கண்ட திட்டம் செயல்படுத்தப்படும் போது அந்த பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள், மூத்த குடிமக்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மூலம் கொடி அசைத்து பெயர் பலகைகள் வைத்து பணிகள் தொடங்க வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×