என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல்
- போக்குவரத்து அதிகாரிகள் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு சில தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால் அந்த பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்கள் மட்டுமின்றி சாலையில் செல்லும் பிற வாகண ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அதிகமான புகார்கள வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து இன்று மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷன் தலைமையில் வட்டார போக்குவ ரத்து ஆய்வாளர் சிவக்குமார்,அரசு போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து மேட்டுப்பாளையம் கோவை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ், அரசு பஸ், பள்ளி, கல்லூரி பஸ்கள் என அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஒரு சில பஸ்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது மாதிரியான ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்