என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வட்டார குழு ஆலோசனை கூட்டம்
- 95 சதவீதம் பேர் மீண்டும் பள் ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.
சீர்காழி:
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கான வட்டார அளவிலான குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மஞ்சுளா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மொழி, வட்டார கல்வி அலுவலர்கள் சரஸ்வதி, கோமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அகோர மூர்த்தி, மக்கள் புறத்தொ டர்பு அலுவலர் மங்களதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி, 'கொள்ளிடம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் மீண்டும் பள் ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 5 சதவீதம் பேரையும் மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார். கூட் டத்தில் வட்டார அளவிலான சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்