என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்றவர் கைது
- சந்தேகத்தின் பேரில் நி்ன்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை.
- அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் நி்ன்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பேரளம் அருகே உள்ள துலார் காலனி தெருவை சேர்ந்த மாதவன் (வயது50) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






