என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மகள் திருமணத்திற்காக பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி சாவு
Byமாலை மலர்2 Jun 2023 10:02 AM GMT
- கொம்பன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
- நாளை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென கொம்பன் மயங்கி விழுந்தார்.
நெல்லை:
பாளையை அடுத்த கிருஷ்ணா புரம் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் கொம்பன் (வயது 54). இவர் கொலை வழக்கில் சிவந்திபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்ட னை கைதியாக பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொம்பன், மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது. அதற்காக அவர் பரோலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நொச்சி குளத்திற்கு வந்திருந்தார். நாளை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென கொம்பன் மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கொம்பன் இறந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X