search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகள் திருமணத்திற்காக  பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி சாவு
    X

    மகள் திருமணத்திற்காக பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி சாவு

    • கொம்பன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
    • நாளை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென கொம்பன் மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    பாளையை அடுத்த கிருஷ்ணா புரம் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் கொம்பன் (வயது 54). இவர் கொலை வழக்கில் சிவந்திபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்ட னை கைதியாக பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கொம்பன், மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது. அதற்காக அவர் பரோலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நொச்சி குளத்திற்கு வந்திருந்தார். நாளை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென கொம்பன் மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கொம்பன் இறந்தார்.

    Next Story
    ×