search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை வரதராஜ பெருமாள் கோவிலில் லட்டு படி சேவை
    X

    சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் காட்சியளித்தார்.

    தஞ்சை வரதராஜ பெருமாள் கோவிலில் லட்டு படி சேவை

    • தஞ்சை ஆபிரகாம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
    • சிறப்பு அலங்காரத்துடன் லட்டு படி சேவை நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் லட்டு படி சேவை நடந்தது. இதையடுத்து தஞ்சை மாமணி கோவில் பாகவதர்களால் திவ்ய பிரபந்த சேவை பாடப்பட்டது.

    பின்னர் இசை குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டது. இதையடுத்து ஜெய சொராலய மாணவிகளின் வினைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் நிருத்தியாஞ்சலி நாட்டிய கலாலயம் மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது.

    பின்னர் பெருமாளுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×