search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வ விநாயகர், பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
    X

    முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த விளக்கு பூஜை

    செல்வ விநாயகர், பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

    • இரவு சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜை நடைபெற்றது.
    • ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரபாஷாணி புரம்- காடந்தகுடியில் செல்வவிநாயகர், பாலமு ருகன், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் (ேம) 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.

    தொடர்ந்து, 31-ந்தேதி குழந்தைகளுக்கான அகல் விளக்கு பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று மதியம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு சுமங்கலி பெண்களுக்கான விளக்கு பூஜையும் நடைபெற்றது.

    இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் மஞ்சள் பொடி, குங்குமம், அருகம்புல், பச்சரிசி உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு வந்து அமர்ந்து விளக்கேற்றி பூைஜயில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    இதனை அடுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பூஜையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, இன்று (2-ந்தேதி) மாவிளக்கு போடுதல், பால்குடம், பால் காவடிகள் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் சிறப்பு அன்னதானமும், தொடர்ந்து, 3 மணிக்கு அம்மன் குளக்கரையில் இருந்து சடல் காவடி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இதேபோல், நாளை (3-ந்தேதி) பாலமுருகன் வீதிஉலாவும், இரவு 7 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு வானவேடிக்கை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரபாஷாணிபுரம்- காடந்தகுடி கிராமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×