search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் மது விற்ற தொழிலாளி கைது
    X

    நெல்லையில் மது விற்ற தொழிலாளி கைது

    • நெல்லை சந்திப்பு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அருணாச்சலம் மது விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் கைலாச புரத்தை சேர்ந்த தொழிலாளி அருணாச்சலம் (வயது46) என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×