ஆறுமுகநேரியில் 4 கோவில்களில் கும்பாபிஷேக விழா

சந்தியம்மன், சுப்பிரமணிய சுவாமி சன்னதி கோபுரங்களிலும் அபிஷேகம் நடந்தது. வாலவிளை பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகா கும்பா பிஷேக விழா நடைபெற்றது.
லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலின் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலின் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் வருடாந்திர கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதற்கான முன்னேற்பாடு நிகழ்வுகள் மற்றும் சிறப்பு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. நேற்று காலையில் கணபதி ஹோமத்தை தொடர்ந்து கும்ப பூஜை, யாக பூஜை, திரவிய ஹோமம், துர்கா ஹோமம் ஆகியவை நடந்தன.

இதன் பின்னர் கோவிலின் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதே போல் சந்தியம்மன், சுப்பிரமணிய சுவாமி சன்னதி கோபுரங்களிலும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாரிய ம்மன், உச்சினிமாகாளி, முப்புடாதி அம்மன், அக்கினி காளி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடந்தது. ஐயப்ப சிவாச்சாரியார், ஆலய பூஜகர் சங்கர நயினார் குழுவினர் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மதியம் அன்னதானம் நடைபெற்றது.மாலையில் லட்சார்ச்சனை தொடங்கியது.இரவில் திருவிளக்கு பூஜையும் அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

நிறைவு நாளான இன்று மதியம் சிறப்பு பூஜையும் மாலையில் லட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்பட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிகளில் கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், சமூக ஆர்வலர் அமிர்தராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சந்தன மாரியம்மன்

விநாயகர் கோவில் தெரு சந்தன மாரியம்மன் மற்றும் உச்சினிமாகா ளியம்மன் கோவிலிலும் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக பூஜை, பூரணாகுதி நடந்தது.இரண்டு சன்னதிகளின் விமான கோபுரங்களில் கும்பாபி ஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் சைவ வேளாளர் சங்க நிர்வாகிகளுமான சங்கரலிங்கம், முருகன், கற்பக விநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.

ஸ்ரீ ராமசுவாமி கோவில்

மேலும் ஆறுமுகநேரி காந்தி தெரு மேல வீடு ஸ்ரீ ராமசுவாமி கோவிலிலும் வருடாந்திர கும்பாபிஷேக விழா நடந்தது.வாலவிளை பிரம்மசக்தி அம்மன் கோவிலில் மகா கும்பா பிஷேக விழா நடை பெற்றது. பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று ஒரே நாளில் நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் ஆறுமுகநேரி விழா கோலம் பூண்டு காட்சியளித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com