search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோகுல கிருஷ்ணன்.

    கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

    • உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சீடை, முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் கிருஷ்ணனுக்கு படைக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அடுத்த வடக்குபட்டம் கிராமத்தில் உள்ள கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவை யொட்டி உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக கிருஷ்ணனுக்கு பிடித்த சீடை, முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    Next Story
    ×