search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை தனியார் நிறுவன பெண் ஊழியர் கடத்தல்: புதுப்பேட்டை  போலீசார் விசாரணை
    X

    புதுவை தனியார் நிறுவன பெண் ஊழியர் கடத்தல்: புதுப்பேட்டை போலீசார் விசாரணை

    • நேற்று பகல் 2 மணிக்கு ஏரிக்கரைக்கு சென்று வருவதாக சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசன். இவரது மகள் அனிதா (22). இவர் கடலூர் கே.என்.சி. கல்லூரியில் பி.ஏ. வரலாறு முடித்து விட்டு புதுச்சேரி லூகாஸ் டி.வி.எஸ். கம்பெனியில் வேலை செய்தார். கம்பெனி விடுமுறை என்பதால் நேற்று வீட்டில் இருந்தார். நேற்று பகல் 2 மணிக்கு ஏரிக்கரைக்கு சென்று வருவதாக சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    அவரை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் குடுமையான்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஞானவேல் என்பவரது மகன் தினேஷ் (24)என்பவர் 4 பேருடன் வந்து தனது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட இளம் பெண்ணை தனி படை அமைத்து வலைவீசி தேடி வருகிறார்.

    Next Story
    ×