search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பரசுராமர் விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்திவிழா
    X

    கன்னியாகுமரி பரசுராமர் விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்திவிழா

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • விநாயகருக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள் பொடி, மாபொடி, பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், நெய், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் பரசுராமர் விநாயகர் கோவில் அமைந்துஉள்ளது.

    இந்த கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா நேற்று மாலை நடந்தது.

    இதையொட்டி விநாயகருக்கு எண்ணெய், பால், தயிர், மஞ்சள் பொடி, மாபொடி, பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தேன், நெய், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு சந்தனகாப்பு அலங்காரத்துடன் விநாய கருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும் விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    அவருடன் இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வ ரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸீம், ஒன்றிய அவைத் தலை வர் தம்பித்தங்கம், பேரூர் கழகச் செயலா ளர்கள்தாமரை தினேஷ், குமார், ராஜபாண்டியன், லீபுரம்ஊராட்சிஅ.தி.மு.க. செயலாளர் கே. லீன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் குமரகுரு, வடக்கு தாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பார்த்தசாரதி,

    ஒன்றிய இலக்கிய அணிசெயலாளர் பகவதியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×