search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டாரில் இன்று ரெயில் மறியல் போராட்டத்துக்கு வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
    X

    கோட்டாரில் இன்று ரெயில் மறியல் போராட்டத்துக்கு வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்

    • ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே வடக்கு பேயன்குழி பகுதியில் உடனடியாக ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனிஸ்டு (விடுதலை) சார்பில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் 7-ந் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் ஏராள மான நிர்வாகிகள் ரெயில் நிலையத்தில் திரண்டனர்.

    முன்னதாக ரெயில் மறியலில் ஈடுபட முயல்ப வர்களை தடுப்பதற்காக ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் 50-க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எனினும் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்துவதற்காக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக வந்தனர்.

    அவர்களை ரயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு மார்க்சிஸ்ட் லெனி னிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ரெயில்வே பாலம் கட்ட வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×