பேச்சிபாறை அருகே பெண்ணிடம் அவதூறு பேசியவர் கைது

மது போதையில் தகாத வார்த்தை பேச்சுபோலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பேச்சிபாறை அருகே பெண்ணிடம் அவதூறு பேசியவர் கைது
Published on

கன்னியாகுமரி:

பேச்சிபாறை அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது 37) இவரின் வீட்டுக்கு செல்லும் பாதை குறுகலான பாதையாகும்.

இந்த வழியாக சாரோடு வலியவிளை பகுதியை சேர்ந்த ஹாஜு (வயது 27) தனது பாட்டி வீட்டுக்கு செல்வதற்க்கு இரு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது எதிரே வந்த ஜெயசுதாவை மது போதையில் தகாத வார்த்தை பேசி அவமானபடுத்தியிருக்கிறார்.

ஜெயசுதா பேச்சிபாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் போலிசார் விசாரனை செய்து ஹாஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com