search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
    X

    கோப்பு படம்

    மார்த்தாண்டம் அருகே குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பண்டார விளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றதால் ஜஸ்டின்ராஜ் துக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×