search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    புதுக்கடை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை

    • ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதி அரசகுளம், மேலவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் நேசையன் (வயது 65). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று நேசையனுக்கும் மனைவி மேரிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், வீட்டின் அருகில் உள்ள வாழை தோப்பில் விஷ மருந்து தின்று ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நேசையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக நேசையன் மகன் ஜெகன் (33) அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×