search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடக்கம்
    X

    ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி தொடக்கம்

    • மாணவர்களின் நிறைகுறைகளை அறிந்து கற்பிக்க வேண்டும் என கலெக்டர் அரவிந்த் பேச்சு
    • மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, தொடக்கநிலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் எண்ணும் எழுத்தும் குறித்த அகஸ்தீஸ்வரம் தொடக்கநிலை ஆசிரியர்க ளுக்கான பயிற்சி முகாம் கொட்டாரம் அரசுமேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    ஒவ்வொரு மாணவ - மாணவியர்களுக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்கும் கல்வியே அடிப்படையாகும். பள்ளிக்கல்வியில் கணித பாடமென்பது மிகவும் முக்கியமானது.

    ஒவ்வொரு மாணவர்களும் கணிதம் நன்கு புரிந்து சுற்றாலே மற்ற பாடங்களையும் எளிதாக கற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் கணித பாடத்தினை கற்றுக்கொள்ளும்போது மிகவும் கடினமானது கிடையாது என்பதை ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துக் கூறி கணிதப் பாடத்தினை எளிதாக கற்க முடியும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

    கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கிடையே உள்ள திறமைகளை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மாணவ மாணவியர்களின் நிறைகள் மற்றும்குறைகளை தெரிந்து கொள்வதோடு, அவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பித்தால் நன்றாக படிப்பார்கள் என்பது தெரிந்துகொண்டு, அதன் வாயிலாக கல்வி கற்பிக்க வேண்டும்.

    மாணவர்கள் புரிந்து கொண்டாலே அதிக அளவு மதிப்பெண்கள் பெறுவார்கள். உயர் கல்வி பயில்வதற்கும் மாணவ, மாணவியர்க ளுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும். மாண வர்கள் வகுப்பறைகளின் செயல்பாடுகள் ஒழுக்க மாகவும் நற்பண்புகளை வளர்த்து கொள்வதற் கான முழு பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.

    விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கையினை ஒவ் வொரு ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். எதிர்கால சமுதாயமான மாணவர்களை உருவாக்குவதில் ஆசி ரியர்களின் பணி இன்றி யமையாதது ஆகும். எனவே அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவ மாணவியர்களுக்கு அரப்பணிப்புடன் சிறந்த முறையில் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, தொடக்கநிலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×