search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலம் அருகே தவறி விழுந்த தொழிலாளி சாவு
    X

    ராஜாக்கமங்கலம் அருகே தவறி விழுந்த தொழிலாளி சாவு

    • வேல்சாமி குடித்துவிட்டு வந்து தனது மகள்களிடம் தகராறு செய்துள்ளார்
    • தனது மகளை அடிப்பதற்கு அவர் விரட்டி சென்றபோது கீழே விழுந்துள்ளார்

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 58). மாங்காய் பறிக்கும் தொழிலாளி. இவரது மனைவி பூவதி நாகர்கோவிலில் உள்ள ஒரு ஹோட்டலில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில நாட்களாக இவர் தனது வீட்டிற்கு வரவில்லை இதனால் மனமுடைந்த வேல்சாமி குடித்துவிட்டு வந்து தனது மகள்களிடம் தகராறு செய்துள்ளார். சம்பத்தன்று தனது மகளை அடிப்பதற்கு அவர் விரட்டி சென்றபோது கீழே விழுந்துள்ளார்.

    அதில், அவர் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் அவரை அருகில் உள்ளவர்கள் பார்த்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜா க்கமங்கலம்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×