search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் 735 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்
    X

    குளச்சலில் 735 லிட்டர் மண்எண்ணை பறிமுதல்

    • அரசால் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு மானியவிலை மண்எண்ணை வழங்கப்படுகிறது
    • மண்எண்ணையை கல்குளம் வட்டவழங்கல் அலுவலரிடம் ஒப்படைப்பு

    கன்னியாகுமாரி:

    குளச்சல் கடலோர காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு ஏட்டுக்கள் சிந்துகுமார், சிவகுமார், ஜஸ்டின் மற்றும் காவலர்கள் சந்திரசேகர், வினு ஆகியோர் குளச்சல் துறைமுக பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த கேரளா பதிவெண் கொண்ட ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அரசால் மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலுக்கு வழங்கும் மானியவிலை மண்எண்ணை 21 கேன்களில் 735 லிட்டர் இருந்ததை கண்டு பிடித்தனர்.

    உடனே போலீசார் காட்டத்துறையை சேர்ந்த ஓட்டுனர் சுஜின் (வயது 36), சுவாமியார்மடத்தை சேர்ந்த கிரிபிரசாத் (38) ஆகிய இருவரையும் பிடித்து மற்றும் மண்எண்ணையையும் மீட்டு குளச்சல் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மண்எண்ணையையும் பிடிப்பட்ட வேனில் வந்தவர்களையும் கல்குளம் வட்டவழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×