என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தக்கலையில் கோவில் அருகே பெண் மர்மச்சாவு
- காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
- உடல் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ளது கொல்லன் விளை. இங்கு புகழ் பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது.
இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வார்கள். இன்று காலையும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் தங்களது பணிகளுக்காக கோவில் வழியாக நடந்து சென்றனர்.
அப்போது கோவில் அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பார்த்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.
இதற்கிடையில் சாலை யில் கிடந்த பெண் தலை யில் காயம் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர்.
தக்கலை போலீசார், மருத்துவக் குழுவுடன் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள், காயத்துடன் கிடந்த பெண்ணை பரிசோ தித்த போது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
தொடர்ந்து பெண் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பெண் வாகன விபத்தில் இறந்தாரா? அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் இங்கு வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரமும் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்