search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் கடற்கரையில் மது அருந்த போலீஸ் தடை
    X

    குளச்சல் கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள காட்சி.

    குளச்சல் கடற்கரையில் மது அருந்த போலீஸ் தடை

    • கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர்.
    • உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் இயற்கை துறைமுக கடற்கரை பகுதிக்கு மாலை வேளை களில் பொதுமக்கள் பொழுது போக்க மற்றும் காற்று வாங்க வந்து செல்வர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் அனுமதியின்றி இங்கு மது விற்பனை செய்யப்ப டுவதாக குளச்சல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடற்கரையில் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகிறது.

    எனவே அங்கு மது அருந்துபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் போலீஸ் நிலையம் சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, புனித காணிக்கை அன்னை திருத்தல செயலா ளர் வால்டர், இணை செயலாளர் ரெக்சன், பொரு ளாளர் ஜெயசீலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×